என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொலை மிரட்டல்"
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.
- பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர்.
- பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அடியாருக்கு அடியார் (வயது 40). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வித்யா.
இவர்களிடம் லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்த புருஷோத்தமன்-செல்வி தம்பதியினர் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் புருஷோத்தமனும், செல்வியும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடியாருக்கு அடியார் மற்றும் அவரது மனைவி வித்யாவிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறினர். இதனை நம்பிய அடியாருக்கு அடியார் தன்னுடைய சேமிப்பு பணம் மற்றும் மனைவி, மாமியார், தாயார் ஆகியோரின் நகைகளை அடகு வைத்து ரூ.1 ¼ கோடியை கொடுத்துள்ளார்.
அதே வேலையில் அடியாருக்கு அடியார் கொடுத்த பணத்தில் நிலத்தை வாங்கி புருஷோத்தமனும் அவரது மனைவி செல்வியும் அவர்களது பெயரில் பதிவு செய்து கொண்டனர். இதனை அறிந்த அடியாருக்கு அடியார் இது குறித்து புருஷோத்தமனிடம் கேட்ட போது, கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அடியாருக்கு அடியார் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
- போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கருமாச்சி பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45) . ஊராட்சி செயலாளர். சம்பவத்தன்று எடகொண்டான் பட்டு காலனி பகுதியில் தெரு மின்விளக்கு எரியவில்லை என அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஆகாஷ் அதே பகுதியில் இருந்த தெரு மின்விளக்கு மற்றும் மீட்டர் பாக்ஸை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஊராட்சி செயலாளர் சேகர், ஆகாஷிடம் தட்டி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த தியாக வல்லி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 47). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமர வேலுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பழனி வேல் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றோர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- முன் விரோதத்தால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு ஊமையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன் மனைவி அம்பிகா (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நடந்த 5-ந் தேதி குமார் (50) மற்றும் நந்தகுமார் (24) ஆகியோர் இடம் சம்மந்தமாக அம்பிகாவிடன் தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும் அம்பிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அம்பிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- வழக்கிலிருந்து விடுவிக்கும்படி மிரட்டல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
ஊசூர் அருகே உள்ள பெரியதெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி உள்ளார்.
இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.
இந்நிலையில் வழக்கில் ஆஜர் ஆவதற்காக அழகேசன் நேற்று கோர்ட்டிற்கு வந்தார்.
அப்போது வழக்கிலிருந்து விடுவிக்கும்படி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் லதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சத்துவாச்சாரி போலீஸ நிலையத்தில் அழகேசன் மீது லதா புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்த அவரை கைது செய்தனர்.
- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது
- தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 57). உளுந்தூர்பேட்டை நகர அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லாலிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர் பேட்டை நகர அ.தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக் கூட்டத்திற்காக காவல்துறை அனுமதி பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 20-ந் தேதிகாலை 10மணியளவில் பஸ் நிலையம் அருகே எனது இருக்கசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த போது தி.மு.க.வினர்அ.தி.மு.க டிஜிட்டல் பேனர்களை கிழித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த என்னை அவர்கள் ஒன்றுக்கூடிக்கொண்டு எனது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி என்னை கையாலும், காலாலும் சரமாரியாக தாக்கி வேட்டியை உருவி கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தி என்னை பொதுமக்கள் மத்தியில் மானபங்கம் செய்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளேன். அந்த நபர்கள் மீது உரிய விசாரணைநடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
- புவனகிரி அருகே நர்சிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
- பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார்.
கடலூர்:
புவனகிரி அடுத்த பெரியநெல்லிகொல்லை அடுத்த துறிஞ்சிகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சிந்து (வயது 19). இவர் வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இவர் வசிக்கும் வீதியில் உள்ள பழனிவேல் மகன் வீரமுத்துவை பார்ப்பதற்காக, எறும்பூரை சேர்ந்த ராயர் மகன் அருண் அடிக்கடி வந்து செல்வார். இவருடன் சிந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் அடிக்கடி போனில் பேசியுள்ளனர். சிந்துவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண், சிந்துவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, அருணுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனை யறிந்த சிந்து மனஉலைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிந்து, நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறினார். சிந்துவின் பெற்றோர், அருண் வீட்டிற்கு சென்று, தனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் மற்றும் குடும்பத்தார், சிந்து மற்றும் அவரது பெற்றோரை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது தொடர்பாக சிந்து மற்றும் அவரது பெற்றோர் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, சிந்துவை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அருண் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
- இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.
- அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி ஜோதி (வயது 30). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்பொழுது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் சுரேந்திரன், வேலுமணி, ரத்தினன் மகன் ரமேஷ், சாமிதுரை மகன் செல்லமுத்து ஆகியோர் ஜோதியை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அவர் வீடு திரும்பினார்.
ஆனால், 4 பேரும் ஜோதியை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர், அவரது வீட்டுக்கு சென்று ஜோதியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என தெரிகிறது. இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன் (30), மற்றொரு சரவணன் (29) உதயகுமார் (33). கூலி தொழிலாளிகள்.
நேற்று முன்தினம் 3 வாலிபர்களும் பைக்கில் விஜயகுமாரின் கடைக்கு வந்தனர். அப்போது பைக்கை கடையின் முன்பு வெளியே நிறுத்தினர்.
இதனை கண்ட விஜயகுமாரின் நண்பர் சீனிவாசன் என்பவர் ஏன் கடையின் வெளியே பைக்கை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டார். அப்போது 3 வாலிபர்களும் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை பார்த்த விஜயகுமார் ஏன் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 வாலிபர்கள் விஜயகுமாரை சரமாரியாக தாக்கினர்.
இதனை தடுக்க வந்த விஜயகுமாரின் தந்தை முனியப்பனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயம் அடைந்த விஜயகுமார் மற்றும் முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அனக்காவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், உதயகுமார் உள்பட 3 பேரை நேற்று கைது செய்தனர்.
- பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறையில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா வீடு கட்டி வருகிறார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் இடத்தில் வீடு கட்டுவதாக இவர் மீதும், அதே பகுதியில் வீடு கட்டும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் காண்டிராக்டர் ஜமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
காண்டிராக்டருக்கு நடிகர் பாபி சிம்ஹா பல லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது. ஜமீரின் உறவினர் உசேனும் பாபி சிம்ஹாவும் பள்ளி நண்பர்கள் என்பதால் இந்த கட்டிட பணிகளை அவர் ஒத்துக் கொண்டார்.
இந்நிலையில் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காண்டிராக்டர் ஜமீரின் உறவினர் உசேன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கொடைக்கானல் செண்பகனூரில் உள்ள எனது தங்கும் விடுதிக்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கே.ஜி.எப். படத்தின் வில்லன் நடிகர் ராமச்சந்திர ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் வந்து வீடு கட்டும் பிரச்சினையில் தலையிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பேரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, ராமச்சந்திர ராஜ் உள்பட 4 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்